Monday, January 15, 2024

காப்புக்கட்டு

 "#காப்புக்கட்டுதல்" என்பது

வெறும் சடங்கல்ல...

நமது முன்னோர்களின் மருத்துவ அறிவு!

#போகிபண்டிகை அன்று நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்க வேண்டும்.

பொங்கலிடுவதற்கு முன்னர் "#காப்புகட்டுதல்" என்ற பெயரில் வீட்டின் வாசலில் வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ கொத்துகளைச் சொருகி, சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள். போகிப்பண்டிகை தினம் ஆன்மாக்களை மகிழ்விக்கும் தினமாகவும், விளைநிலங்களின் நான்கு திசைகளிலும் "#காப்பு வளைத்தல்" என்ற பெயரில் எல்லைப் பகுதிகளை கண்டறிவார்கள்.

#வயல்விழா :- வயலும் வயலைச் சார்ந்த இடமும் மருதம் என்றழைக்கப்படுகிறது. மருதநிலத்தின் கடவுள் இந்திரன், இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு. போகி என்றால் மகிழ்ச்சியானவன் என்று பொருள். விளைநிலங்களின் கடவுளான இந்திரனை வணங்கும்போது "பசி, பிணி, பகை" நீக்கி, "சம்பா, குறுவை, தாளடி" என்ற முப்போகத்திலும் நல்ல விளைச்சலைக் கண்டு முன்னேற்றம் அடைய #வயல்விழாவாக முற்காலத்தில் கொண்டாடப்பட்டு வந்த போகிப் பண்டிகை, காலப்போக்கில் தற்பொழுது #வாசல்பொங்கலாக கொண்டாடப்படுகிறது.

"#காப்புக்கட்டு" பற்றி சிறு விளக்கம்.

1. ஆவாரம் பூ,

2. பீளைப்பூ,

3. வேப்பிலை,

4. தும்பை செடி, அல்லது துளசி,

5. நாயுறுவி செடி,

என ஐந்து வகையான செடிகளை காப்புகட்டுவதற்கு பயன்படுத்த வேண்டும். ஆனால் காலப்போக்கில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை, என்று மூன்றுவகை மட்டுமே பயன்படுத்திவருகிறார்கள். அதுவும் நகரங்களில் முற்றிலும் மறந்துவிட்டனர்.

மார்கழிமாதம் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக கதிர்வீச்சு பாதிப்பு வராமல் இருக்க வாசலில் கோலமிட்டு மாட்டுசானத்தில் பூசனிப்பூ வைத்திருப்பார்கள். தைமாதம் முதல் பருவ நிலை மாற்றத்தால் நிறைய நோய்கள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும். எனவே முன்னெச்சரிக்கையாக தங்களைப் பாதுகாத்துக்கொள்ள போகி பண்டிகை அன்று வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களின் நான்கு மூலைகள் மற்றும் வாசற்படிகளில் ஆவாரம்பூ, வேப்பிலை, சிறுபீளை, தும்பை இலை, இவைகளை ஒவ்வொரு கொத்தாத மாவிலை தோரணத்துடன் சேர்த்து காப்புகட்டும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள். மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு மாலையாகவும் கட்டி வணங்குவார்கள்.

#ஆவாரம்பூ உடல் வெப்பமாவதை தடுக்கும். #வேப்பிலை காற்றில் இருக்கும் கிருமிகளை தடுக்கும் கிருமி நாசினி. #மாஇலை பறித்த பிறகும் ஆக்சிஜனை வெளியேற்றி உடல் களைப்பை நீக்கும். #சிறுபீளை நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். #தும்பை வாசம் தலைவலியை போக்க கூடியது. #துளசியின் மகிமை பற்றி நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான் அந்த மகாலட்சுமியின் அம்சம். அதுமட்டுமில்லாமல் காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது.எனவே இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வீட்டு வாசலில் கட்டி வந்தார்கள் நம் முன்னோர்கள்.

எனவே அனைவரும் தங்களது இல்லங்களிலும் தொழிற்கூடங்களிலும் மேலே குறிப்பிட்டபடியோ அல்லது தங்களுக்கு தெரிந்த மூலிகைச் செடிகளை ஒன்றாக சேர்த்து நாகரீகம் கருதாமல் காப்புக்கட்டுங்கள். தங்களின் பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் நமது முன்னோர்களின் பாரம்பரியத்தை கடைபிடிக்க விளக்கமாகச் சொல்லிகொடுத்து, போகிபண்டிகையில் கடந்த காலத்தில் நடந்த நல்ல நிகழ்வுகளுக்கு நன்றி சொல்லி வணங்குவோம்.

அனைவருக்கும் எனது 

#இனிய_பொங்கல்_நல்வாழ்த்துக்கள்.🙏🙏

As received on WhatsApp! Credits: Unknown 

Sunday, March 14, 2021

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.

🌝 தவளை கத்தினால் மழை.
🌝 அந்தி ஈசல் பூத்தால் 
அடை மழைக்கு அச்சாராம். 
🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.
🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. 
🌝 தை மழை நெய் மழை.
🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும். 
🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.
🌝 வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தே பயிர் செய். 
🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.
🌝 களர் கெட பிரண்டையைப் புதை.
🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
🌝 நன்னிலம் கொழுஞ்சி 
நடுநிலம் கரந்தை 
கடை நிலம் எருக்கு.
🌝 நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய்.
🌝 ஆடிப்பட்டம் பயிர் செய். 
🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை.
🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
🌝 உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ. 
🌝 அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல் .
🌝 புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு.
🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.
🌝 ஆடு பயிர் காட்டும் 
ஆவாரை கதிர் கட்டும்.
🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .
🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. 
🌝 நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்.
🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.
🌝 தேங்கி கெட்டது நிலம் 
தேங்காமல் கெட்டது குளம்.
🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.
🌝 சொத்தைப் போல் 
விதையை பேண வேண்டும்.
🌝 விதை பாதி வேலை பாதி.
🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை. 
🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.
🌝 கோப்பு தப்பினால் 
குப்பையும் பயிராகாது.
🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம். 
🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்.

வாழ்க வையகம்! 
வாழ்க வளமுடன்! 
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

#உழவே_தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும்.
இனி பணத்தைச் சாப்பிட 
முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது...

#முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..

அனைவரும் அறிந்துகொள்ள #பகிருங்கள்...❣️

Friday, October 25, 2019

Diwali

DIWALI is mainly for five days.


1.   VAK BARASH

2.   DHAN TERAS

3.   KALI CHAUDASH

4.   DIWALI

5.   NEW YEAR


Each has a secret meaning.


VAK BARAS: -


Most guys know this as VAGH BARAS. There is nothing like VAGH BARAS. It is VAK BARAS. VAK means VANI (SPEECH). This is a DAY for SARASWATI pooja. SARASWATI stands for KNOWLEDGE / EDUCATION / STUDY.


So, the first day stands for gaining KNOWLEDGE. Without KNOWLEDGE – you are ZERO.


KNOWLEDGE means Information backed up by PERSONAL EXPERIENCE. If you just have information – then you and GOOGLE both are equal.  


DHAN TERAS: -


Most guys have taken the literal meaning of DHAN and they are doing LAXMI POOJAN on that day. They are 100% wrong. DHAN TERAS is for DHANVANTARI, God of MEDICINE. DHAN TERAS signifies the worshipping of HEALTH. It tells you to maintain your MENTAL and PHYSICAL HEALTH.



HEALTH is the REAL WEALTH.


You will need a ROBUST health if you want to enjoy whatever money can buy. Without HEALTH there will be NO MOTIVATION to earn money.



KALI CHAUDASH: -


Most guys are busy removing KAL (BAD OMEN) on this day. It stands for worshipping POWER / GUTS. You need to take action / you need to learn to take RISK on this day. This is a day for PARAKRAM or POWERFUL ACTION.



ACTION and that too POWERFUL action is the MANTRA of this day. If you don’t act with a SENSE of URGENCY, your actions will lack the power. Action without power will not give you the MOMENTUM required to continue your action. Powerful Action comes from POWERFUL PURPOSE. The powerful purpose will come – if you have done the KNOWLEDGE PART properly. So, everything is linked.  




DIWALI: -


If you have gained KNOWLEDGE in the first step/ MAINTAINED YOUR HEALTH (MENTAL and PHYSICAL) in the second stage and TAKEN POWERFUL ACTIONS in the third stage – you will get LAXMI at the FOURTH STEP.



Big Money is always the result of ACTIONS. Your action when backed up by KNOWLEDGE and SOUND HEALTH, it will always leads to positive results.

NEW YEAR DAY: -

If you go on taking above mentioned 4 steps – EACH DAY, ALL DAYS will be NEW YEARS for you. You will remain HAPPY and PROSPEROUS continuously and for N number of years.



Even today WARREN BUFFETT reads 6 hours per day. CHARLIE MUNGER reads so much at 95 age that his family calls him a BOOK with a LEG and HAND. 

KNOW SARASWATI – KNOW LAXMI    or 
NO SARASWATI – NO LAXMI. If you don’t have proper knowledge – give a lot of importance to the first step. When you have knowledge - you understand the importance of maintaining health automatically.

Just contemplate the HIDDEN MEANING of each of the DIWALI day

Note: Unknown Forward Source, Whatsapp

Tuesday, July 25, 2017

தமிழ் மாதமும் சூரியன் உதிக்கும் திசையும்

சித்திரை 1, ஆடி 1, தை 1 எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் என்று நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிறுக்காங்க!

Ok. Let's look at the science behind it.

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு school பசங்களுக்கு சொல்லிதறோம்.

என்னைக்காச்சும் ஒரு திசைகாட்டி (compass) வச்சு சூரியன் உதிக்குறப்போ  சரிபார்த்து இருக்கோமா? கண்டிபாக இல்ல...
நம்ம  கல்வி முறை (education system)  வடிவமைத்த (design) வெள்ளகாரன், நம்ம கிட்ட இருந்த அறிவியலை அழிச்சிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்திட்டு போயிறுக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று.

ஆமாங்க சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் சரியா  கி்ழக்கே உதிக்கும் அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு தீவிர புள்ளியில் (extreme point) மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும், அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்.

இப்படி சரியா கிழக்கு ல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு போயிட்டு மறுபடியும் சரியா கிழக்குக்கு வர ஆகிற நேரம் ஒரு வருடம்.

சரி! இதுக்கும் தமிழ் மாததுக்கும் என்ன சம்பந்தம் னு தானே யோசிக்குறீங்க.

சூரியன் சரியா கிழக்குல தொடங்கும் நாள் தான் சித்திரை 1 புத்தாண்டு! (In science it is called Equinox)

அப்புறம் தீவிர வடகிழக்கு புள்ளி தான் ஆடி 1 (solstice)

மறுபடியும் கிழக்குக்கு வருவது ஐப்பசி 1 (equinox)

தீவிர தென்கிழக்கு செல்வது தை 1 (solistice)

இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனணவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு, ஆடிப்பெருக்கு
ஐப்பசி (equinox)- தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்

நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்.

- இது ஒரு WhatsApp செய்தி

Tuesday, January 1, 2013

Thursday, April 12, 2012

Navagraha Temples - Route Map

Navagraha Temples Situated as a cluster around the Kumbakonam, TamilNadu. Below is the Route Map Started from Kumbakonam, travels through the nine temples and ends at Sirkazhi, TamilNadu. View

Tuesday, October 25, 2011

Punctuation is powerful

 
a woman without her man is nothing

Note: the message extracted from my mailbox credits to original creator - get the preceding mailer here

Thursday, August 4, 2011

Fwd: Summary of all scams in India since 1947


Hi,

Here is a summary of all scams since independence. These may not be the only ones. These are the ones that were caught and brought to the notice of the public.

Friday, April 22, 2011

Birds need you this summer

Summer is here and its going to be equally harsh to the animals around us. Kindly do your tiny bit by keeping a bowl of fresh water out side your balcony or garden.
Until one has loved an animal, part of their soul remains unawakened
95% WON'T FORWARD THIS, WILL YOU?

Related Post : http://subsha.blogspot.com/2009/04/we-must-protect-our-birds-animals.html

Note: the message extracted from my mailbox credits to original creator, Image Unknown Source

Friday, March 25, 2011

Where to Go During an Earthquake

Where to Go During an Earthquake
Please SHARE this with your loved ones:

Remember that stuff about hiding under a table or standing in a doorway? Well, forget it! This is a real eye opener. It could save your life someday.

Saturday, March 19, 2011

Recycle Vs Reuse

Image Credit Viji
In Simple terms, Recycle refer to the things that cannot be used as such which can be break down and segregated back to raw materials, which can be used to produce the new thing. On other hand, Reuse refers to using the things as such until then its life degrades to unused state or recyclable state.

Wednesday, October 27, 2010

What do women really want?

Young King Arthur was ambushed and imprisoned by the monarch of a neighboring kingdom..
The monarch could have killed him but was moved by Arthur's youth and ideals. So, the monarch offered him his freedom, as long as he could answer a very difficult question. Arthur would have a year to figure out the answer and, if after a year, he still had no answer, he would be put to death.

The question was: *What do women really want? *

Monday, September 20, 2010

தினம் ஒரு தகவல் – இன்றைய பெண்

சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் இன்றைய பெண்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். இவர் கூறுவது பெண்களை இழிவுபடுத்துவதற்காகவோ அல்லது குறை கூறுவதற்காகவோ கிடையாது. பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக

Monday, September 6, 2010

Ignorance of the ability brings disability



Ignorance of the ability brings disability - a short flim from you tube watch it really good

Wednesday, August 4, 2010